2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

புதிய கட்டடத்தொகுதிகளுக்கான அடிக்கல் நாட்டிவைப்பு

Gavitha   / 2014 டிசெம்பர் 11 , மு.ப. 10:27 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.சசிக்குமார்

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தின் புதிய கட்டடத்தொகுதிகளுக்கான அடிக்கல்லை உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க புதன்கிழமை (10) நாட்டிவைத்தார்.

நிலாவெளி ஆறாவது மைல்கல் கோணேசபுரியில் அமைந்துள்ள கிழக்குப் பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தில் புதிதாக அமைக்கப்படவுள்ள நான்கு மாடிக்களைக் கொண்ட கட்டடத்தொகுதியில் ரூபாய் 330 மில்லியன் செலவில் பௌதீக விஞ்ஞான பீடம் அமைக்கப்படவுள்ளது.

அத்துடன் நான்கு மாடிக்களைக் கொண்ட பிறிதொரு கட்டடத்தொகுதியில் ரூபாய் 233 மில்லியன் செலவில் நூலகம் மற்றும் ரூபாய் 103 மில்லியன் செலவில் சிற்றுண்டிச்சாலையும் அமைக்கப்படவுள்ளன.

கிழக்குப் பல்கலைக்கழக திருகோணமலை வளாக பொறுப்பதிகாரி பேராசிரியர். ரஞ்சித் பிறெமலால் டி சில்வாவின் அழைப்பின் பேரில் அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க இவற்றுக்கான அடிக்கல்லை நாட்டி வைத்தார்.

இந்த அடிக்கல் நாட்டும் நிகழ்வைத் தொடர்ந்து அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க விரிவுரையாளர்கள், உத்தியோகஸ்தர்கள் மற்றும்; மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார்.

இந்நிகழ்வுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் ரியர் அட்மிரல் மொகான் விஜயவிக்கிரம, கிழக்குப் பல்கலைக்கழக வேந்தர் கலாநிதி கிட்ணன் பொகிந்தசாமி, விரிவுரையாளர்கள், உத்தியோகஸ்தர்கள் மற்றும் மாணவர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .