2025 ஜூன் 23, திங்கட்கிழமை

மூதூரில் பாராட்டு விழா நடத்த ஏற்பாடு

Thipaan   / 2015 மே 27 , மு.ப. 09:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எம்.ஏ.பரீத்

மூதூர் பீ.கே. பவுண்டேஸென் அமைப்பானது, எதிர்வரும்  ஜூன் மாதம் முதலாம் திகதி   மூதூர் பொது மைதானத்தில்  பாராட்டு விழாவொன்றை நடத்த திட்டமிட்டுள்ளதாக அவ்வமைப்பின் தலைவர் பீ.கே.கலீல் தெரிவித்தார்.

பாராட்டு விழா சம்பந்தமான கலந்துரையாடல் மூதூர் பிரதேச சபை கேட்போர் கூடத்தில் செவ்வாய்க்கிழமை (26) இரவு இடம்பெற்றது.

அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கடந்த வருடம் இடம்பெற்ற  புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த  176 மாணவர்களும் ஓய்வு பெற்ற 450 அரசாங்க உத்தியோகத்தர்களும் 55 வயதைத் தாண்டிய இறைபணியாளர்கள் 100 பேரும் பாராட்டிக் கௌரவிக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
   

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .