2025 ஜூன் 23, திங்கட்கிழமை

தாய்லாந்தில் நடைபெறவுள்ள ஒலிம்பியாட் போட்டியில் திருமலை மாணவன்

Thipaan   / 2015 மே 31 , மு.ப. 09:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எம்.ஏ.பரீத்

எதிர்வரும் ஜூலை மாதம் 04ஆம் திகதி தொடக்கம் தாய்லாந்தில் நடைபெறவுள்ள 56ஆவது சர்வதேச ஒலிம்பியாட் போட்டியில் இலங்கைக் குழுவின் சார்பில் பங்குபற்ற திருகோணமலை சென் ஜோசப் கல்லூரி மாணவரான அப்ழல் அப்ஹாம் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இவர், சென்ற ஆண்டு தென் கொரியாவில் நடைபெற்ற ஒலிம்பியாட் போட்டியில் தனிநபர் போட்டியில் வெள்ளிப் பதக்கமும் குழுப் போட்டியில் வெண்கலப் பதக்கமும் பெற்றவராவார்.

இவர் கந்தளாயை பிறப்பிடமாகவும் திருகோணமலையை வசிப்பிடமாகவும் கொண்ட அப்ழல்- றிஹானா தம்பதிகளின் புதல்வராவார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .