2025 ஜூன் 26, வியாழக்கிழமை

250 மாணவர்கள் கௌரவிப்பு

Kogilavani   / 2014 ஏப்ரல் 21 , மு.ப. 10:49 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஒலுமுதீன் கியாஸ்

திருகோணமலை மாவட்டத்தில் கடந்த தரம் 5 ஆம் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த 250 மாணவர்களை கௌரவித்து பரிசில் வழங்கும் வைபவம் ஞாயிற்றுக்கிழமை(20) கிண்ணியா மத்திய கல்லூரி அப்துல் மஜீத் மண்டபத்தில் நடைபெற்றது.

நாட்டில் 25 ஆயிரம் கல்விமான்ளை உருவாக்கும் திட்டத்தின் கீழ் கொழும்பு ஹஜியா நம்பிக்கை நிதியத்தின் அனுசரணையுடன் ஏற்பாடு செய்யப்;பட்ட இவ் வைபவமானது, அதன் தலைவர் தேசமானிய டாக்டர் எம்.எஸ்.எச்.முகமட் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில், ஹதியா நம்பிக்கை நிதியத்தின் செயலாளரும் இளைஞர் நாடாளுமன்றத்தின் நிறைவேற்றுக்குழு உறுப்பினருமான தேச சக்தி எஸ்.எம்.ஹிஸாம், ஹதியா நம்பிக்கை நிதியத்தின் தேசிய அமைப்பாளர் தேச சத்தி வி.எம்.எஸ்.ஷியாஸ், கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளர் யு.எல்;.ஏ.அஸீஸ், கிண்ணியா வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.ஐ.சேகு அலி, பிரதிக் கல்விப் பணிப்பாளர் முனவ்வரா நளீம், கிண்ணியா கோட்டக் கல்வி அதிகாரி கே.ஏ.அகது, கிண்ணியா பிரதேச சபை தவிசாளர்.எம்.சுபியான், ஓய்வு பெற்ற கோட்டக்கல்வி அதிகாரி ஏ.ஆர்.எம்.சுபைர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இந் நிதியம் கடந்த ஐந்தாண்டுகளில்  16 மாவட்டங்களில்  இவ்வாறான நிகழ்வினை நடத்தியிருப்பதும் அந்த வரிசையில் இது 17 ஆவது மாவட்டம் என்பதும் குறிப்பிடத்தக்கது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .