2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

31 இந்திய மீனவர்கள் விடுதலை

Kogilavani   / 2013 ஒக்டோபர் 01 , மு.ப. 07:32 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஸ்ரனிஸ்லெஸ் கீதபொன்கலன்


முல்லைத்தீவு கடற்பிரதேசத்தில் வைத்து கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் இலங்கைக் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டு திருகோணமலை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 31 இந்திய மீனவர்கள் இன்று காலை திருகோணமலை நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டனர்.

தமிழ்நாடு காரைக்கால், நாகைபட்டணத்தை சேர்ந்த மீனவர்களே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பாக நான்கு படகுகளில் இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்து அத்துமீறி மீன்பிடித்தனர் என்ற குற்றத்தின் பேரில் இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

திருகோணமலை நீதவான் நீதிமன்ற நீதிபதி யு.எல்.எம்.அஸ்கர் இந்திய மீனவர்களை விடுதலை செய்யும் உத்தரவை விடுத்த அதேவேளை அவர்களின் படகுகளை தொடர்ந்தும் தடுத்து வைக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.

படகுகளின் இந்திய உரிமையாளர்கள் எதிர்வரும் டிசம்பர் 7ஆம் திகதி திருகோணமலை நீதிமன்றிற்கு நேரில் சமூகமளித்து அத்துமீறி மீன்பிடிக்கு படகுகளை அனுப்பிய குற்றம் தொடர்பான வழக்கை எதிர்கொள்ளவேண்டும் எனவும் நீதிபதி தமது தீர்ப்பில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

விடுவிக்கப்பட்ட மீனவர்களை இலங்கை கடற்படையினர் ஊடாக இந்திய கரையோரக் காவற்படையினரிடம் ஒப்படைக்குமாறும் நீதவான் தமது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இந்திய மீனவர்களை இன்று மாலை முதல் நாளை நண்பகல் வரை திருகோணமலை வை.எம்.சீ.ஏ.நிறுவனத்தில் தங்கவைத்து பராமரிக்க இலங்கைக்கான இந்திய தூதரகம் ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .