2026 மார்ச் 19, வியாழக்கிழமை

பஸ் நிலைய தடுப்பை அகற்றியமைக்கு இழப்பீடு செலுத்திய எம்.பி.

Super User   / 2011 ஜூலை 25 , மு.ப. 09:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஐ.ம.சு.முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்  நிஷாந்த முத்துஹெட்டிகம, காலி பஸ் நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த இரும்புத் தடுப்பொன்றை தான் அகற்றியமைக்கு இழப்பீடாக 18,000 ரூபாவை காலி மாநகர சபைக்கு செலுத்தியுள்ளார்.

4 கோடி ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் அண்மையில் திறந்துவைக்கப்பட்ட காலி பஸ் நிலையத்தில் இருந்த இரும்புத் தடுப்பொன்றை முத்துஹெட்டிகம எம்.பி. அகற்றினார். சில பஸ்களில் ஏறும் பயணிகளுக்கு அத்தடுப்பு இடைஞ்சலாக இருப்பதாக பஸ் நடத்துநர்களின் புகார் தெரிவித்ததையடுத்து இந்நடவடிக்கையை அவர் மேற்கொண்டார்.

எனினும் தென் மாகாண முதலமைச்சரின் உத்தரவின்பேரில் விசேட அதிரடிப்படையின் பாதுகாப்புடன் கடந்த வாரம் அத்தடுப்பு மீண்டும் பொருத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
 


  Comments - 0

  • asker Monday, 25 July 2011 09:13 PM

    புதிய மார்வின் சில்வா

    Reply : 0       0

    bzukmar Monday, 25 July 2011 11:07 PM

    அவளை தொடுவநேன் அவதிபடுவநேன் கோட்டைக்குள் குத்து வெட்டு, யாரிடம் போய் சொல்வது?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .