2025 செப்டெம்பர் 15, திங்கட்கிழமை

கட்டுவன இரட்டைக் கொலையாளிகளை கைது செய்யுமாறு ஜே.வி.பி.யினர் ஆர்ப்பாட்டம்

Menaka Mookandi   / 2012 ஜூன் 18 , மு.ப. 11:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

கட்டுவன பிரதேச இரட்டைக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடையதான சந்தேகநபர்களைக் கைது செய்யுமாறு வலியுறுத்தி மக்கள் விடுதலை முன்னணியினரால் (ஜே.வி.பி) ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டமொன்று இன்று திங்கட்கிழமை பிற்பகல் நடத்தப்பட்டது.

இந்த இரட்டைக்கொலைச் சம்பவம் இடம்பெற்று மூன்று தினங்கள் ஆகின்ற நிலையில் கொலையுடன் தொடர்புடையதான சந்தேகநபர்கள் எவரும் இதுவரையில் கைது செய்யப்படவில்லை.

அத்துடன், சந்தேகநபர்களைக் கைது செய்வதில் பொலிஸார் பின்தங்கியுள்ளனர் என்றும் அச்சந்தேகநபர்கள் அரசியல்வாதிகளால் பாதுகாக்கப்படுகின்றனர் என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் அநுர குமார திஸாநாயக்க உட்பட நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. (கிருஷான் ஜீவக ஜயருக்)

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .