Editorial / 2017 மே 30 , மு.ப. 06:24 - 0 - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபைக்கும் அதன் வீரர்களுக்குமிடையில், ஊதிய ஒப்பந்தம் தொடர்பான முறுகல் நிலையில், தமது நிலைப்பாட்டை வீரர்கள் மாற்றவில்லையெனத் தெரிவித்துள்ள வேகப்பந்து வீச்சாளர் மிற்சல் ஸ்டார்க், இந்தப் பேரம்பேசல்களில், கிரிக்கெட் சபையோடு பேசுவதற்கு, அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களின் சங்கத்தையே தொடர்ந்தும் நம்பிக்கை கொண்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
வீரர்களின் சங்கத்தைத் தாண்டி, வீரர்களோடு நேரடியாகப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்கு, கிரிக்கெட் சபை முயன்றுவரும் நிலையிலேயே, ஸ்டார்க்கின் இந்தக் கருத்து வெளியாகியுள்ளது.
தாங்கள், நியாயமான பங்கையே கேட்பதாகத் தெரிவித்த ஸ்டார்க், அதிகமானதைத் தாங்கள் கேட்கவில்லையெனவும் குறிப்பிட்டார்.
26 minute ago
29 minute ago
35 minute ago
41 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
29 minute ago
35 minute ago
41 minute ago