2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

இலங்கையில் முதன்முறையாக நாளொன்றில் 200ஐத் தாண்டிய கொரோனா வைரஸ் உயிரிழப்புகள்

Shanmugan Murugavel   / 2021 ஓகஸ்ட் 26 , பி.ப. 10:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இலங்கையில் கொரோனா வைரஸ் தொடர்பிலான 209 உயிரிழப்புகள் நேற்று ஏற்பட்டதை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.

அந்தவகையில், கொரோனா பரவல் ஆரம்பித்ததிலிருந்து முதற் தடவையாக நாளொன்றுக்கான கொரோனா வைரஸ் தொடர்பிலான உயிரிழப்புகள் 200ஐத் தாண்டியுள்ளது.

இதேவேளை, இதனுடன் இலங்கையில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கையானது 8,000ஐத் தாண்டி, 8,157ஆக உயர்ந்துள்ளது.

குறித்த உயிரிழந்தவர்களில் 108 ஆண்களும், 101 பெண்களும் என்ற நிலையில், எவரும் 30 வயதுக்கு கீழ்ப்பட்டவர்கள் இல்லை. 30 தொடக்கம் 59 வயதுக்குட்பட்டோர் 46 பேர் என்பதுடன், மிகுதியான 60 மற்றும் அதற்கு மேற்பட்டோர் 163 பேர் ஆவர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X