Editorial / 2026 பெப்ரவரி 12 , பி.ப. 01:43 - 0 - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சொஹாரா, புகாரி அந்த மாநகர சபையின் உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளதாக வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் அதிகார சபைத் தேர்தல்கள் கட்டளைச் சட்டத்தின் பிரிவு 10A(1)(a) இன் கீழ், கொழும்பு மாநகர சபையின் திருமதி முகமது புஹாரி பாத்திமா சொஹாரா, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினராக இருந்து நீக்கப்பட்டதால், மாநகர சபை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார் என கொழும்பு மாநகர சபையின் தேர்தல் அதிகாரியான பியூமி அட்டிகல கையொப்பத்தில் வெளியான வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2026 ஆம் ஆண்டுக்கான கொழும்பு மாநகர சபையின் வரவு-செலவுத்திட்ட வாக்கெடுப்பில், கட்சியின் அறிவுறுத்தலுக்கு மாறாக தன்னுடைய வாக்கை தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவாக வழங்கியதன் காரணமாக கட்சியினால் ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உள்படுத்தப்பட்டார்.
இதையடுத்து, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் நாயகமான ஜனாதிபதி சட்டத்தரணி, பாராளுமன்ற உறுப்பினர் நிசாம் காரியப்பர் அவரை கட்சியிலிருந்து நீக்குவதற்கான நடவடிக்கை எடுத்தார்.
39 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
1 hours ago
2 hours ago