Editorial / 2020 ஏப்ரல் 23 , மு.ப. 01:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா தொற்றுக்குள்ளான 20 பேர் இன்று (22) இனங்காணப்பட்டதையடுத்து, இலங்கையில் இதுவரை தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 330 ஆக அதிகரித்துள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
இவர்களின் பெரும்பாலானவர்கள் கிழக்கில் தனிமைப்படுத்தல் முகாம்களில் இனங்காணப்பட்டுள்ளனரெனவும் ஒருவர் பொலன்னறுவையிலும், மற்றொருவர் ஜா-எலவிலும் இனங்காணப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொலன்னறுவையில் கொரோனா வைரஸ் தொற்றாளர் இனங்காணப்பட்டதைத் தொடர்ந்து, அம்மாவட்டத்தின் லங்காபுர தொகுதியில் 12 பகுதிகள் முற்றாக முடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
36 minute ago
52 minute ago
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
52 minute ago
3 hours ago
5 hours ago