Editorial / 2026 மே 05 , மு.ப. 11:54 - 0 - {{hitsCtrl.values.hits}}

இலங்கை மண்ணில் புதைக்கப்பட்டுள்ள டச்சுப் போர் வீரர்களைக் கௌரவிக்கும் வகையில், கொழும்பு ஜாவத்தை மயானத்தில் உள்ள பொதுநலவாயப் போர் மயானப் பகுதியில், கொழும்பிலுள்ள நெதர்லாந்து தூதரகம் திங்கட்கிழமை (04) அன்று ‘நினைவு தினத்தை’ (Remembrance Day) அனுஷ்டித்தது.
இந்நிகழ்வில் கலந்துகொண்ட பதில் தூதுவர் ஐவன் ரூட்ஜென்ஸ் (Mr. Iwan Rutjens), போர் நினைவுத் தூபிக்கும் அங்கு அடக்கம் செய்யப்பட்டுள்ள டச்சு வீரர்களின் கல்லறைகளுக்கும் மலர் அஞ்சலி செலுத்தியதுடன், இரண்டு நிமிட மௌன அஞ்சலியையும் கடைபிடித்தார். இரண்டாம் உலகப் போருக்குப் பின்னரான காலப்பகுதியிலிருந்து, கொழும்பு, கண்டி மற்றும் திருகோணமலை மயானங்களில் மொத்தம் 36 டச்சுப் பிரஜைகளின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளன.
இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்ததிலிருந்து, ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 4 ஆம் திகதி நெதர்லாந்து தனது நாட்டுக்காக உயிர்நீத்தவர்களை நினைவு கூருகின்றது. 1961 ஆம் ஆண்டு முதல், இரண்டாம் உலகப் போரில் உயிரிழந்த 102,000 டச்சு யூதர்கள் மற்றும் ஏனைய சிறுபான்மையினருடன் இணைந்து, பல்வேறு மோதல்கள், போர்கள் மற்றும் அமைதி காக்கும் பணிகளில் உயிரிழந்த டச்சு வீரர்களும் இந்நாளில் நினைவு கூரப்படுகின்றனர்.
நெதர்லாந்தில் தேசிய நினைவு தின நிகழ்வுகள் மே 4 ஆம் திகதி இரவு 8:00 மணிக்கு இடம்பெறும். அந்த நேரத்தில், நாடு முழுவதும் இரண்டு நிமிட மௌன அஞ்சலி கடைபிடிக்கப்படும். பிரதான நினைவு தின நிகழ்வு ஆம்ஸ்டர்டாமில் உள்ள டேம் சதுக்கத்தில் (Dam Square), அந்நாட்டு அரசர் மற்றும் பாராளுமன்றப் பிரதிநிதிகளின் முன்னிலையில் நடைபெறும். இந்தத் தேசிய நிகழ்விற்கு இணையாக நெதர்லாந்தின் அனைத்து நகரங்களிலும் உள்ளூர் மட்டத்திலான நினைவு தின நிகழ்வுகள் நடத்தப்படுவதுடன், இரவு 8:00 மணிக்கு முழு நாடும் இரண்டு நிமிடங்கள் நிசப்தமாகி மௌன அஞ்சலி செலுத்தும்.

51 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago
1 hours ago
1 hours ago