2025 மே 14, புதன்கிழமை

சுதந்திரக் கட்சி – பொதுஜன பெரமுன இன்று புரிந்துணர்வு ஒப்பந்தம்

Editorial   / 2019 ஒக்டோபர் 10 , மு.ப. 10:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகள் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில்  இன்று (10)  ஒன்றில் கைச்சாத்திடவுள்ளன.

கொழும்பு மன்றக் கல்லூரியில் இன்று முற்பகல் 10 மணிக்கு இரு கட்சிகளின் பிரதிநிதிகளும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடவுள்ளனர்.

 ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் சிரேஷ்ட உப தவிசாளர் நிமல் சிறிபால டி சில்வா, கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர உள்ளிட்டோரும்  ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன சார்பில் தவிசாளர் பேராசிரியர் G.L. பீரிஸ், உள்ளிட்டோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

இதனை ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பதில் தவிசாளர் பேராசிரியர் ரோஹண லக்‌ஷ்மன் பியதாச தெரிவித்துள்ளார்.

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பிலேயே, ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .