Editorial / 2020 பெப்ரவரி 23 , பி.ப. 03:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக குற்றப்புலனாய்வு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளின் மேம்பாடு தொடர்பாக ஆராய்வதற்காக பாதுகாப்ப அமைச்சு, விஷேட செயலணி ஒன்றை உருவாக்கியுள்ளது.
மேஜர் ஜெனரால் ஜகத் அல்விஸ் தலைமையிலான இந்த செயலணி சிரேஷ்ட புலனாய்வு அதிகாரிகள் அறுவரை கொண்டதாக நியமிக்கப்பட்டுள்ளது.
மேற்படி விசாரணைகளில் முன்னேற்றம் தொடர்பான அறிக்கையை இக்குழு வாரத்துக்கு ஒருமுறை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரத்னவுக்கு அறிவிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விசாரணைகள் கடந்த அரசாங்கத்தின் கீழ் முறையாக இடம்பெறவில்லை என்றும், விசாரணைகளை சிறப்பாக முன்னெடுக்க தவறும் படசத்தில் ஈஸ்டர் தாக்குதலுக்கு முகம்கொடுத்தோருக்கு வாழ்நாள் முழுவதும் மன அமைதி கிட்டாதெனவும் தெரிவித்துள்ளார்.
அதற்கமைய குறித்த செயலணி, தாக்குதல் தொடர்பான உண்மையாக தகவல்களை சேகரித்து தாக்குதலின் சூத்திரதாரிகளை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டுமென ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
5 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
2 hours ago
3 hours ago