2025 மே 07, புதன்கிழமை

மூன்று மாவட்டங்களில் அதிக தொற்றாளர்கள்

S. Shivany   / 2020 டிசெம்பர் 20 , மு.ப. 10:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக நேற்று அடையாளம் காணப்பட்டோரில் அனேகமானோர்  கொழும்பு, களுத்துறை, கம்பஹா ஆகிய மாவட்டங்களில் பதிவாகியுள்ளனர் என, கொவிட் 19 ஒழிப்புக்காக தேசிய செயலணி தெரிவித்துள்ளது.

இதற்கமைய, நேற்று அடையாளம் காணப்பட்ட 618 தொற்றாளர்களில் 241 பேர் கொழும்பிலும் 120 பேர் களுத்துறையிலும் 99 பேர் கம்பஹாவிலும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

ஏனையவர்கள் நாட்டின் ஏனைய மாவட்டங்களில் பதிவாகியுள்ளனர் என, கொவிட் 19 ஒழிப்புக்காக தேசிய செயலணி தெரிவித்துள்ளது.

கொழும்பு மாவட்டத்தின் பொரலை, கொம்பனித்தெரு, புளுமென்டல் ஆகிய பிரதேசங்களில் அதிக தொற்றாளர்கள் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X