Editorial / 2020 ஓகஸ்ட் 24 , மு.ப. 10:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
கட்டுகஸ்தோட்டை - குருநாகல் வீதியின் கலகெதர பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
இரண்டு வயதுடைய மக்கள் மற்றும் 36 வயதுடைய அவரது தந்தை ஆகியோரே இதன்போது உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனரக வாகனம் ஒன்று குடைசாய்ந்து காரொன்றில் மோதியதுடன் பின்னர் மற்றுமொரு காரின் மேற்பகுதியில் மோதியுள்ளது.
இதன்போது, இரண்டு கார்களில் பயணித்த 5 பேர் படுகாயமடைந்த நிலையில், கலகெதர மற்றும் பேராதனை வைத்தியசாலைகளில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.
சம்பவம் தொடர்பில் கலகெதர பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago