2026 மே 15, வெள்ளிக்கிழமை

36 மணிநேரம் கவனம் : மக்களுக்கு எச்சரிக்கை

Editorial   / 2026 மே 14 , பி.ப. 03:17 - 0     - {{hitsCtrl.values.hits}}


இலங்கையின் அனர்த்த நிலைமை மற்றும் காலநிலை அறிக்கையை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் விடுத்துள்ளது.  2026.05.13 மாலை 6:00 மணி முதல் 2026.05.14 காலை 6:00 மணி வரையான காலப்பகுதிக்கான அந்த விரிவான நிலைமை அறிக்கையில்...

பாதுகாப்பு மையங்கள் மற்றும் இடர்நிலை:

புத்தளம் மாவட்டம்: புத்தளம் பிரதேச செயலகப் பிரிவில் 474 குடும்பங்களைச் சேர்ந்த 1264 நபர்கள் 06 பாதுகாப்பு மையங்களில் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

பதுளை மாவட்டம்: 13 பாதுகாப்பு மையங்களில் 369 குடும்பங்கள் (1003 நபர்கள்) தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பு மாவட்டம்: 02 பாதுகாப்பு மையங்களில் 18 குடும்பங்கள் (61 நபர்கள்) உள்ளனர்.

கேகாலை மாவட்டம்: 02 பாதுகாப்பு மையங்களில் 43 குடும்பங்கள் (133 நபர்கள்) உள்ளனர்.

நுவரெலியா மாவட்டம்: 01 பாதுகாப்பு மையத்தில் 35 குடும்பங்கள் (140 நபர்கள்) உள்ளனர்.

காலநிலை முன்னறிவிப்பு:

இலங்கைக்கு வடகிழக்கே நிலைகொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் அடுத்த 36 மணிநேரத்திற்குள் நாட்டை விட்டு விலகிச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேற்கு, சப்ரகமுவ, மத்திய, தெற்கு, வடமேற்கு மற்றும் வட மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
மேற்கு, சப்ரகமுவ, மத்திய, வடமேற்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ - 150 மி.மீ வரையான பலத்த மழை பெய்யக்கூடும்.

நீர் மட்டம் மற்றும் அணைக்கட்டுகள்:

களு கங்கை: களுத்துறை மாவட்டத்தின் மில்லகந்த (கலவெல்லாவ) பகுதியில் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது.

அத்தனகலு ஓயா: தன்னாமலே பகுதியில் நீர் மட்டம் குறைந்து வருகிறது.
அணைக்கட்டுகள்: இராஜாங்கனை (04 வான்கதவுகள்), லுணுகம்வெஹெர (09 வான்கதவுகள்), வெஹெரகல மற்றும் தெதுரு ஓயா (தலா 04 வான்கதவுகள்) ஆகியவற்றின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

போக்குவரத்துத் தடைகள்:

மாத்தளை: ரிவஸ்டன்   பகுதியில் பாதிப்படைந்த வீதிகள் தற்போது இலகுரக வாகனப் போக்குவரத்திற்கு மட்டும் திறக்கப்பட்டுள்ளன.
கண்டி: தலத்து ஓயா வீதியின் உடதெல்தொத்த பாலம் இடிந்து விழுந்தமையால் அவ்வீதி மூடப்பட்டுள்ளது.

புகையிரத சேவை: மன்னாரிலிருந்து மதவாச்சி வரையான சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. மலையகப் புகையிரதப் பாதையில் ரம்புக்கணை முதல் அம்பேவெல வரை போக்குவரத்து தடைப்பட்டுள்ளது; அம்பேவெலை முதல் பதுளை வரை மட்டுமே புகையிரதங்கள் இயங்குகின்றன.

பொதுமக்களுக்கான அறிவுறுத்தல்: இடியுடன் கூடிய மழையின் போது மின்னல் தாக்கங்கள் மற்றும் பலத்த காற்றினால் ஏற்படக்கூடிய விபத்துகளைத் தவிர்க்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.

 



 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .