2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

அன்டனி ஜெகநாதனுக்கு மாவை சேனாதிராஜா அஞ்சலி

George   / 2016 ஒக்டோபர் 04 , மு.ப. 08:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன் 

மாரடைப்பு காரணமாக உயிரிழந்த வடமாகாணசபை பிரதி அவைத்தலைவர் அன்டனி ஜெகநாதனுக்கு இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, திங்கட்கிழமை அஞ்சலி செலுத்தினார்.

மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள வடமாகாணசபை பிரதி அவைத்தலைவர் அன்ரனி ஜெகநாதனின் பூதவுடல், வியாழக்கிழமை மு.ப 11.00 மணிக்கு பொது மக்களின் அஞ்சலிக்காக கரைதுறைப்பற்று பிரதேச சபை மைதானத்தில் (முல்லைத்தீவு கச்சேரிக்கு முன்னால்) வைக்கப்படவுள்ளது.

தொடர்ந்து, பிற்பகல் 3 மணியளவில் முல்லைத்தீவு புனித இராயப்பர் தேவாலயத்தில் திருப்பலி  ஒப்புக் கொடுக்கப்பட்டு, உன்ணாப்புலவு கத்தோலிக்க மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X