2025 மே 14, புதன்கிழமை

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 26 மாணவர்கள் கைது

Editorial   / 2019 ஒக்டோபர் 24 , பி.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவர்கள் 26 பேர் , கொழும்பு கோட்டை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு, லோட்டஸ் சுற்றுவட்டத்துக்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நிலையில், அவர்களை கலைப்பதற்காக கலகமடக்கும் பொலிஸார் வரவழைக்கப்பட்டிருந்தனர்.

அத்துடன், ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிஸார் கண்ணீர்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டிருந்தனர்.

இந்த நிலையில், தேர்தல் சட்டங்களை மீறியதாக தெரிவித்து குறித்த மாணவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

வாழ்க்கை செலவு அதிகரிப்புக்கு ஏற்ப மகபொல புலமைப்பரிசில் தொகையை அதிகரிக்குமாறு கோரி இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .