Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.K.M. Ramzy / 2020 நவம்பர் 16 , மு.ப. 09:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.றொசேரியன் லெம்பேட்
மன்னார் பிரதேச செயலாளர் பிரிவுகுட்பட்ட சௌத்பார் கிராம பகுதியில் விதி முறைகளை மீறி அமைக்கப்பட்ட மீன் வளர்ப்பு பண்ணையினால், முழுக் கிராமமும் நீரில் மூழ்கிய துடன் , கடல் நீர் கிராமத்துக்கு உள் நுழைந்துள்ளமையி னால் அப்பகுதி மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.
மன்னார் சௌத்பார் கிராம சேவகர் பிரிவில் கடல் களப்பு பகுதியில் அமைக்கப்பட்ட மீன் வளர்ப்பு பண்ணையினாலும் குறித்த மீன் வளர்ப்பு பண்ணையின் வடிகால் அமைப்பு மற்றும் அப்பகுதியில் அமைக்கப்பட்ட கால் வாய் காரணமாக வும் குறித்த கிராமத்தில் பெய்யும் மழை நீர் வடிந்தோடி கடலுக்குள் செல்ல முடியாத நிலையில் குறித்த கிராமம் நீரினால் மூழ்கியுள்ளது.
அதே நேரத்தில் நீர் மக்களின் வீடுகளுக்குள் சென்றுள்ள தாகவும், இதனால் வாழ்வாதார தோட்டச் செய்கைகளையும் பாதிப்படைந்துள்ளதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
2 hours ago
3 hours ago
19 Jul 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
19 Jul 2025