Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 31, சனிக்கிழமை
Suganthini Ratnam / 2016 மே 08 , மு.ப. 04:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு, கல்லடிப் பாலத்துக்கு அருகில் நிர்மாணிக்கப்பட்ட பெண் புலவர் ஒளவையாரின் உருவச்சிலை திரைநீக்கம் செய்து வைக்கும் நிகழ்வு, சனிக்கிழமை (07) நடைபெற்றது.
மட்டக்களப்பு வர்த்தகச் சங்கத்தின் ஏற்பாட்டில் 750,000 ரூபாய் செலவில் ஏழு அடி உயரத்தில் இந்த சிலை நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, நினைவுப்படிகத்தை கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கே.துரைராஜசிங்கம் திரைநீக்கம் செய்து வைத்தார். மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் சறோஜினிதேவி சாள்ஸ் சிலைக்கு மலர் மாலை அணிவித்தார். (படங்கள்: ஏ.எச்.ஏ.ஹுஸைன் எஸ்.பாக்கியநாதன்,எம்.எஸ்.எம்.நூர்தீன்,வா.கிருஸ்ணா)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
47 minute ago
55 minute ago
1 hours ago