2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

கோர விபத்து...

Princiya Dixci   / 2016 ஜூன் 22 , மு.ப. 05:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

முல்லைத்தீவு, முறிகண்டிப் பகுதி புகையிரதக் கடவையில் இன்று செவ்வாய்க்கிழமை (22) காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அக்கராயன் பகுதியிலிருந்து மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனம், அக்கராயன் முறிகண்டி பிரதான வீதியிலுள்ள புகையிரத கடவையை கடக்க முற்பட்டபோது, யாழிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த புகையிரதத்தில் மோதுண்டதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன்போது, டிப்பர் வாகனம் கடும் சேதமடைந்ததுள்ளது. விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மாங்குளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

படப்பிடிப்பு: சண்முகம் தவசீலன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .