Editorial / 2018 ஜனவரி 06 , மு.ப. 11:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிண்ணியா நகர சபையின் ஏற்பாட்டிலும் ஆசிய மன்றத்தின் நிதியுதவியுடனும், பாடசாலை மாணவர்களினதும், வாசகர்களினதும் நலன் கருதி புதிய பாடத்திட்டத்திற்கும், கல்வி நடவடிக்கையின் மேலதிக தேடல்களினூடாக அறிவைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் கிண்ணியா நகர சபையின் கீழ் இயங்கும் நூலகங்களுக்கான ஒரு தொகை நூல்கள் வழங்கும் வைபவம் கிண்ணியா பொது நூலக கேட்போர் கூடத்தில் வியாழக் கிழமை(04) இடம்பெற்றது
இதன்போது கிண்ணியா பொது நூலகம், ஆலங்கேணி உள்ளிட்ட நூலகங்களுக்கான நூல்கள், உதவி உள்ளூராட்சி ஆணையாளர் எஸ்.சுதாகரன் மற்றும் கிண்ணியா நகர சபையின் செயலாளர் என்.எம்.நௌபீஸ் போன்றோர்களால், நூலகர்களிடம் கையளிக்கப்பட்டது. (படப்பிடிப்பு -ஹஸ்பர் ஏ ஹலீம், ஒலுமுதீன் கியாஸ் )




24 Feb 2026
24 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 Feb 2026
24 Feb 2026