Princiya Dixci / 2016 டிசெம்பர் 06 , மு.ப. 06:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
மறைந்த தமிழக முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதா ஜெயராமுக்கு, இன்று செவ்வாய்க்கிழமை (06) வடமாகாண சபையில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
தமிழக முதலமைச்சர் செல்வி.ஜெயலலிதா ஜெயராம் செப்ரெம்பர் மாதம் 22ஆம் திகதி உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
எனினும், சிகிச்சை பலனின்றி நேற்றுத் திங்கட்கிழமை இரவு உயிரிழந்தார்.
அவருடைய இறுதிக் கிரியைகள் இன்று செவ்வாய்க்கிழமை (06) நடைபெறும் நிலையில், வடமாகாண சபையின் மாதாந்த அமர்வும் நடைபெறுகின்றது.
இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், வடமாகாண சபை மாதாந்த அமர்வு, நாளை வரை ஒத்திவைக்கப்பட்டது. (படப்பிடிப்பு: எம்.றொசாந்த்)
4 minute ago
53 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
53 minute ago
1 hours ago
1 hours ago