Editorial / 2021 செப்டெம்பர் 15 , மு.ப. 11:37 - 0 - {{hitsCtrl.values.hits}}

79 மில்லியன் ருபாய் பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் நால்வர் சந்தேகத்தின் பேரில் தலைமன்னாரில் கைது செய்யப்பட்டுள்ளனர். கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இவர்களிடமிருந்து 9 கிலோ 914 கிராம் நிறைகொண்ட ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
செப்டெம்பர் 14ஆம் திகதி இரவு முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போதே, கடல் வழியாக நாட்டுக்குள் கடத்தப்படவிருந்த போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது என இலங்கை கடற்படை அறிவித்துள்ளது.
ஐஸ் போதைப்பொருளும் டிங்கி ரக படகொன்றும் தமது பொறுப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது என்றும் கடற்படை ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.



22 minute ago
29 minute ago
38 minute ago
58 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
29 minute ago
38 minute ago
58 minute ago