Shanmugan Murugavel / 2020 ஒக்டோபர் 31 , மு.ப. 10:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஒஸ்திரியாவின் தலைநகர் வியன்னாவில் இடம்பெற்றுவரும் வியன்னா பகிரங்க டென்னிஸ் தொடரின் காலிறுதிப் போட்டியில் உலகின் முதல்நிலை வீரரான நொவக் ஜோக்கோவிச் அதிர்ச்சித் தோல்வியடைந்துள்ளார்.
நேற்று நடைபெற்ற இத்தாலியின் லொரென்ஸோ சொனிகோவுடனான போட்டியில் 2-6, 1-6 என்ற நேர் செட் கணக்கில் சேர்பியாவின் ஜோக்கோவிச் தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறியிருந்தார்.
இதேவேளை, நடப்புச் சம்பியனும் உலகின் மூன்றாம்நிலை வீரருமான ஒஸ்திரியாவின் டொமினிக் தியெம், தனது காலிறுதிப் போட்டியில் 6-7 (5-7), 2-6 என்ற நேர் செட் கணக்கில் ரஷ்யாவின் அன்ட்ரே ருப்லெவ்விடம் தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறினார்.
இந்நிலையில், உலகின் ஆறாம்நிலை வீரரான ரஷ்யாவின் டனில் மெட்வெடெவ், தனது காலிறுதிப் போட்டியில் 4-6, 6-7 (5-7) என்ற நேர் செட்களில் தென்னாபிரிக்காவின் கெவின் அன்டர்சனிடம் தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறினார்.
2 hours ago
9 hours ago
27 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
9 hours ago
27 Jan 2026