Editorial / 2026 மே 03 , பி.ப. 06:14 - 0 - {{hitsCtrl.values.hits}}

டி.கே.பி. கபில
பங்களாதேஷில் நடைபெற்ற ஒருநாள் மற்றும் இருபதுக்கு-20 (T20) கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்று, இரண்டிலும் முழுமையான வெற்றியைப் (White-wash) பதிவு செய்த இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி, கட்டுநாயக்க விமான நிலையத்தை ஞாயிற்றுக்கிழமை (03) அன்று பிற்பகல் வந்தடைந்தது.
மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கிலும், மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு-20 தொடரை 3-0 என்ற கணக்கிலும் கைப்பற்றி இலங்கை அணி அபார சாதனை படைத்துள்ளது.
பங்களாதேஷின் டாக்கா நகரிலிருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் "யு.எல்.- 190" (UL-190) ரக விமானம் மூலம் இன்று மாலை 04:12 மணியளவில் அவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தைச் சென்றடைந்தனர்.
வெற்றி வாகை சூடித் திரும்பிய வீராங்கனைகளை வரவேற்பதற்காக, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் (SLC) அதிகாரிகள் குழுவினர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்திற்கு வருகை தந்திருந்தனர்.






2 hours ago
16 May 2026
16 May 2026
16 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
16 May 2026
16 May 2026
16 May 2026