Shanmugan Murugavel / 2026 மார்ச் 04 , மு.ப. 07:06 - 0 - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியானது கொல்கத்தாவில் இன்றிரவு 7 மணிக்கு நடைபெறவுள்ளது.
இரண்டு அணிகளும் குழுநிலைப் போட்டியில் சந்தித்தபோது தென்னாபிரிக்கா வென்ற நிலையில் அப்போட்டியிலிருந்து நியூசிலாந்து முன்னேற்றத்தைக் காண்பிக்க வேண்டியுள்ளது.
குறிப்பாக தென்னாபிரிக்க அணித்தலைவர் ஏய்டன் மார்க்ரமை நியூசிலாந்து அணித்தலைவர் மிற்செல் சான்ட்னெர், கோல் மக்கொஞ்சி ஆகியோர் கட்டுப்படுத்த வேண்டிய தேவை உள்ளது. தவிர டேவிட் மில்லர், டெவால்ட் பிறெவிஸ், ட்ரிஸ்டன் ஸ்டப்ஸை உள்ளடக்கிய மத்திய வரிசையையும் சான்ட்னெர் கட்டுப்படுத்த வேண்டியுள்ளது.
இது தவிர தென்னாபிரிக்காவின் குயின்டன் டி கொக், றயான் றிக்கெல்டனுக்கும் நியூசிலாந்தின் லொக்கி பெர்கியூசனுக்குமிடையிலான மோதலே இப்போட்டியின் முடிவை தீர்மானிக்கலாம்.
மறுபக்கமாக தென்னாபிரிக்காவின் மார்கோ ஜன்சன் நியூசிலாந்தின் விக்கெட்டுகளைச் சாய்ப்பதிலும் போட்டியின் போக்கு காணப்படுகிறது.
பனிப்பொழிவு காரணமாக இரண்டாவதாகத் துடுப்பெடுத்தாடும் அணியே இப்போட்டியில் வெல்லுமென எதிர்பார்க்கப்படுகிறது.
தனது குழந்தை பிறப்புக்காக இங்கிலாந்துக்கு நியூசிலாந்தின் வேகப்பந்துவீச்சாளர் மற் ஹென்றி சென்ற நிலையில், ஈரான்-ஐக்கிய அமெரிக்க, இஸ்ரேலிய மோதல் காரணமாக அவர் இப்போட்டிக்கு முன்பாக அணியில் இணைவது கடினமாக உள்ள நிலையில் அவரை அணியில் ஜேக்கப் டஃபி பிரதியிடுவாரெனத் தெரிகிறது.
1 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago