Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 28, சனிக்கிழமை
Shanmugan Murugavel / 2021 ஏப்ரல் 28 , மு.ப. 12:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), அஹமதாபாத்தில் நேற்றிரவு நடைபெற்ற டெல்லி கப்பிட்டல்ஸுடனான போட்டியில் மயிரிழையில் றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் வென்றது.
இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற டெல்லியின் அணித்தலைவர் றிஷப் பண்ட், பெங்களூரை முதலில் துடுப்பெடுத்தாடப் பணித்தார்.
அந்தவகையில், முதலில் துடுப்பெடுத்தாடிய பெங்களூர், ஆரம்பம் முதலே குறிப்பிட்ட இடைவெளிகளில் விக்கெட்டுகளைப் பறிகொடுத்த போதும் ஏ.பி. டி வில்லியர்ஸின் ஆட்டமிழக்காத 75 (42) ஓட்டங்களால் 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 171 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில், இஷாந்த் ஷர்மா, நான்கு ஓவர்களில் 26 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும், ஆவேஷ் கான் நான்கு ஓவர்களில் 24 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியிருந்தனர்.
பதிலுக்கு, 172 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய டெல்லி, ஆரம்பத்தில் விக்கெட்டுகளை இழந்திருந்தபோதும், ஷிம்ரோன் ஹெட்மயரின் ஆட்டமிழக்காத 53 (25), றிஷப் பண்டின் 58 (48) ஓட்டங்கள் மூலம் வெற்றியிலக்கை நெருங்கி வந்த போதும், 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 170 ஓட்டங்களையே பெற்று மயிரிழையில் ஒரு ஓட்டத்தால் தோற்றது. பந்துவீச்சில், கைல் ஜேமிஸன், நான்கு ஓவர்களில் 32 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டைக் கைப்பற்றியதோடு, ஹர்ஷால் பட்டேல், நான்கு ஓவர்களில் 37 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்தார். யுஸ்வேந்திர சஹால் இரண்டு ஓவர்களில் 10 ஓட்டங்களையும், டேனியல் சாம்ஸ் இரண்டு ஓவர்களில் 15 ஓட்டங்களையே விட்டுக் கொடுத்திருந்தனர்.
இப்போட்டியின் நாயகனாக டி வில்லியர்ஸ் தெரிவானார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago