2025 மே 17, சனிக்கிழமை

சமநிலையில் றோமா – லேஸியோ போட்டி

Freelancer   / 2023 நவம்பர் 14 , பி.ப. 12:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

இத்தாலியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான சீரி ஏ தொடரில், ஸ்டேடியோ ஒலிம்பிக்கோவில் நேற்று முன்தினம் நடைபெற்ற லேஸியோ, றோமா அணிகளுக்கிடையிலான போட்டியானது 0-0 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது.

இதேவேளை, தமது மைதானத்தில் நடைபெற்ற எம்போலியுடனான போட்டியில் 0-1 என்ற கோல் கணக்கில் நடப்புச் சம்பியன்களான நாப்போலி தோற்றது.

இந்நிலையில், உடினிஸின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணிக்கும், அத்லாண்டாவுக்குமிடையிலான போட்டியானது 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .