2025 ஜூலை 14, திங்கட்கிழமை

சம்பியனானார் குவிட்டோவா

Editorial   / 2018 மே 13 , பி.ப. 10:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்பெய்னின் தலைநகர் மட்ரிட்டில் இடம்பெற்றுவந்த மட்ரிட் பகிரங்க டென்னிஸ் தொடரில் உலகின் 10ஆம் நிலை வீராங்கனையான செக் குடியரசின் பெட்ரா குவிற்றோவா சம்பியனாகியுள்ளார்.

நேற்று இடம்பெற்ற இறுதிப் போட்டியில், 7-6 (8-6), 4-6, 6-3 என்ற செட் கணக்கில் நெதர்லாந்தின் கிகி பேர்ட்டன்ஸை இரண்டு மணித்தியாலங்களும் 52 நிமிடங்களும் நடைபெற்ற இறுதிப் போட்டியில் வென்றே பெட்ரா குவிற்றோவா சம்பியனாகியிருந்தார்.

அந்தவகையில், இத்தொடரை 2011, 2015ஆம் ஆண்டுகளிலும் வென்றிருந்த பெட்ரா குவிற்றோவா, இத்தொடரை மூன்று தடவைகள் வென்ற முதற் பெண்மணியாக தனது பெயரைப் பதிவுசெய்துகொண்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .