Shanmugan Murugavel / 2020 டிசெம்பர் 12 , மு.ப. 06:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
சர்வதேச கால்பந்தாட்டச் சம்மேளனத்தின் இவ்வாண்டுக்கான சிறந்த வீரருக்காக, ஜேர்மனிய புண்டெஸ்லீகா கழகமான பயேர்ண் மியூனிச்சின் றொபேர்ட் லெவன்டோஸ்கி, ஸ்பானிய லா லிகா கழகமான பார்சிலோனாவின் லியனல் மெஸ்ஸி, இத்தாலிய சீரி ஏ கழகமான ஜுவென்டஸின் முன்களவீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆகியோர் தெரிவாகியுள்ளனர்.
சிறந்த வீரர் எதிர்வரும் வியாழக்கிழமை அறிவிக்கப்படவுள்ளார்.
போலந்து சர்வதேச அணியின் முன்களவீரரான லெவன்டோஸ்கி, கடந்த பருவகாலத்தில் 34 கோல்களை பயேர்ண் மியூனிச்சுக்காக புண்டெஸ்லீகாவில் பெற்றிருந்தார். ஜுவென்டஸுக்காக சீரி ஏயில் 31 கோல்களை ரொனால்டோ பெற்றதோடு, 25 கோல்களை லா லிகாவில் மெஸ்ஸி பெற்றிருந்தார்.
சிறந்த கோல்காப்பாளராக இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான லிவர்பூலின் அலிஸன், இன்னொரு ஸ்பானிய லா லிகா கழகமான அத்லெட்டிலோ மட்ரிட்டின் ஜான் ஓப்ளக், பயேர்ண் மியூனிச்சின் மனுவல் நோயர் ஆகியோர் தெரிவாகியுள்ளனர்.
சிறந்த முகாமையாளராக பயேர்ண் மியூனிச்சின் ஹன்ஸி பிளிச், லிவர்பூலின் ஜுர்ஜன் க்ளோப், இன்னொரு இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான லீட்ஸ் யுனைட்டெட்டின் மார்செலோ பியஸ்லா ஆகியோர் தெரிவாகியுள்ளனர்.
1 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
7 hours ago
8 hours ago