2025 ஜூலை 12, சனிக்கிழமை

ஜுவன்டஸ், நாப்போலி வென்றன

Editorial   / 2018 ஓகஸ்ட் 26 , பி.ப. 09:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

இத்தாலிய சீரி ஏ தொடரில் இடம்பெற்ற போட்டிகளில் ஜுவன்டஸும் நாப்போலியும் வென்றுள்ளன.

தமது மைதானத்தில், நேற்று இடம்பெற்ற லேஸியோவுடனான போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் ஜுவன்டஸ் வென்றிருந்தது. ஜுவன்டஸ் சார்பாக, மிரலம் பிஜானிக், மரியோ மண்டூஸிக் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.

இதேவேளை, தமது மைதானத்தில் இன்று இடம்பெற்ற ஏ.சி மிலனுடனான போட்டியில் 3-2 என்ற கோல் கணக்கில் நாப்போலி வென்றிருந்தது. நாப்போலி சார்பாக, பியோத்தர் ஜினீஸ்கி இரண்டு கோல்களையும் ட்ரைஸ் மேர்ட்டன்ஸ் ஒரு கோலையும் பெற்றனர். ஏ.சி மிலன் சார்பாக, ஜாகோமோ பொனவெந்துரா, டாவிடே கலாப்ரியா ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .