Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 09, புதன்கிழமை
Shanmugan Murugavel / 2015 செப்டெம்பர் 29 , பி.ப. 03:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிம்பாப்வே, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டித் தொடரை, பாகிஸ்தான் அணி கைப்பற்றியுள்ளது. தொடரில் இரண்டாவதும் இறுதியுமான போட்டியை வென்றே, அவ்வணி தொடரைக் கைப்பற்றியது.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 136 ஓட்டங்களைப் பெற்றது. அவ்வணி சார்பாக உமர் அக்மல் ஆட்டமிழக்காமல் 38 (28), சொஹைப் மசூத் 26 (25) ஓட்டங்களைப் பெற்றனர்.
பந்துவீச்சில், டினாஷே பணியங்கர, லூக் ஜொங்வே இருவரும் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
137 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 121 ஓட்டங்களை மாத்திரம் பெற்று, 15 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.
துடுப்பாட்டத்தில் சியன் வில்லியம்ஸ் ஆட்டமிழக்காமல் 40 (36), சீகன்டர் ராஸா 36 (36) ஓட்டங்களைப் பெற்றனர்.
பந்துவீச்சில், மொஹமட் இர்பான், இம்ரான் கான் இருவரும் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இப்போட்டியின் நாயகனாக உமர் அக்மல் தெரிவானார்.
இத்தொடரின் முதலாவது போட்டியிலும் 136 ஓட்டங்களைப் பெற்ற பாகிஸ்தான் அணி, அப்போட்டியில் 13 ஓட்டங்களால் வெற்றிபெற்றிருந்தது.
இத்தொடரின் நாயகனாக, பாகிஸ்தானின் இமாட் வசீம் தெரிவானார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
2 hours ago