Shanmugan Murugavel / 2022 நவம்பர் 02 , பி.ப. 06:08 - 0 - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரில், அடிலெய்ட்டில் இன்று நடைபெற்ற பங்களாதேஷுடனான குழு இரண்டு சுப்பர் -12 போட்டியில் இந்தியா வென்றது.
இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற பங்களாதேஷின் அணித்தலைவர் ஷகிப் அல் ஹஸன், இந்திய அணியை முதலில் துடுப்பெடுத்தாடப் பணித்தார்.
அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா, விராட் கோலியின் ஆட்டமிழக்காத 64 (44), லோகேஷ் ராகுலின் 50 (32), சூரியகுமார் யாதவ்வின் 30 (16), இரவிச்சந்திரன் அஷ்வினின் ஆட்டமிழக்காத 13 (06) ஓட்டங்களோடு 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 184 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில், தஸ்கின் அஹ்மட் 4-0-15-0 என்ற பெறுதியைக் கொண்டிருந்தார்.
பதிலுக்கு 185 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ், ஏழு ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 66 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில் மழை குறுக்கிட்ட நிலையில், டக்வேர்த் லூயிஸ் முறையில் 16 ஓவர்களில் 151 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இந்நிலையில், ஆரம்பத்தில் அதிரடியாக ஆரம்பித்த லிட்டன் தாஸ் 60 (27) ஓட்டங்களுடன் ஆட்டமிழந்த நிலையில், நுருல் ஹஸன் ஆட்டமிழக்காமல் 25 (14), தஸ்கின் அஹ்மட் ஆட்டமிழக்காமல் 12 (07) ஓட்டங்களைப் பெற்றுப் போராடிய நிலையில் 16 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 145 ஓட்டங்களையே பெற்ற பங்களாதேஷ் ஐந்து ஓட்டங்களால் தோல்வியடைந்தது.
இப்போட்டியின் நாயகனாக விராட் கோலி தெரிவானார்.
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025