Shanmugan Murugavel / 2015 டிசெம்பர் 29 , பி.ப. 05:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
நியூசிலாந்து, இலங்கை அணிகளுக்கிடையிலான 2 போட்டிகள் கொண்ட இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டித் தொடருக்கான இலங்கை அணித் தலைவராக, டினேஷ் சந்திமால் நியமிக்கப்பட்டுள்ளார்.
அணித்தலைவர் லசித் மலிங்கவுக்கு ஏற்பட்டுள்ள காயம் காரணமாக, இந்தத் தொடரில் பங்குபற்றுவதற்கு அவரால் முடியாது என்பதாலேயே, தலைவராக சந்திமால் நியமிக்கப்பட்டுள்ளார்.
மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான தொடரில், அவரது முழங்காலில் ஏற்பட்ட ஏற்பட்ட காயத்தினாலேயே, அவரால் பங்குபற்ற முடியாமல் போயுள்ளதோடு, அவருக்குப் பதிலாக சுரங்க லக்மால் இணைக்கப்பட்டுள்ளார். மேலதிகமாக, ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் தனுஷ்க குணதிலகவுக்கும், இத்தொடருக்கான இலங்கைக் குழாமில் இணைக்கப்பட்டுள்ளார்.
இரு அணிகளுக்குமிடையிலான இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டித் தொடர், ஜனவரி 7ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
16 minute ago
29 minute ago
40 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
29 minute ago
40 minute ago
2 hours ago