Shanmugan Murugavel / 2021 மார்ச் 17 , மு.ப. 12:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியாவுக்கு எதிரான இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரில், மீண்டும் இங்கிலாந்து முன்னிலை பெற்றது.
அஹமதாபாத்தில் நேற்றிரவு நடைபெற்ற, ஐந்து போட்டிகள் கொண்ட இத்தொடரின் மூன்றாவது போட்டியை வென்றமையைத் தொடர்ந்தே, 2-1 என இங்கிலாந்து முன்னிலை பெற்றது.
குறித்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட இந்தியா, மார்க் வூட், கிறிஸ் ஜோர்டானின் அவ்வப்போது விக்கெட்டுகளைப் பறிகொடுத்து தடுமாறிய நிலையில், அணித்தலைவர் விராட் கோலியின் ஆட்டமிழக்காத 77 (46) ஓட்டங்களோடு, 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 156 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. வூட் 3, ஜோர்டான் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்தனர்.
பதிலுக்கு, 157 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து, ஜொஸ் பட்லரின் ஆட்டமிழக்காத 83 (52), ஜொனி பெயார்ஸ்டோவின் ஆட்டமிழக்காத 40 (28) ஓட்டங்களோடு, 18.2 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றியிலக்கையடைந்தது.
இப்போட்டியின் நாயகனாக, ஜொஸ் பட்லர் தெரிவானார்.
5 hours ago
8 hours ago
26 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
8 hours ago
26 Jan 2026