2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

மீண்டும் முன்னிலை பெற்ற இங்கிலாந்து

Shanmugan Murugavel   / 2021 மார்ச் 17 , மு.ப. 12:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இந்தியாவுக்கு எதிரான இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரில், மீண்டும் இங்கிலாந்து முன்னிலை பெற்றது.

அஹமதாபாத்தில் நேற்றிரவு நடைபெற்ற, ஐந்து போட்டிகள் கொண்ட இத்தொடரின் மூன்றாவது போட்டியை வென்றமையைத் தொடர்ந்தே, 2-1 என இங்கிலாந்து முன்னிலை பெற்றது.

குறித்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட இந்தியா, மார்க் வூட், கிறிஸ் ஜோர்டானின் அவ்வப்போது விக்கெட்டுகளைப் பறிகொடுத்து தடுமாறிய நிலையில், அணித்தலைவர் விராட் கோலியின் ஆட்டமிழக்காத 77 (46) ஓட்டங்களோடு, 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 156 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. வூட் 3, ஜோர்டான் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்தனர்.

பதிலுக்கு, 157 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து, ஜொஸ் பட்லரின் ஆட்டமிழக்காத 83 (52), ஜொனி பெயார்ஸ்டோவின் ஆட்டமிழக்காத 40 (28) ஓட்டங்களோடு, 18.2 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றியிலக்கையடைந்தது.

இப்போட்டியின் நாயகனாக, ஜொஸ் பட்லர் தெரிவானார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X