Shanmugan Murugavel / 2021 மார்ச் 23 , பி.ப. 06:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்துக்கெதிரான முதலாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில், 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 317 ஓட்டங்களை இந்தியா பெற்றுள்ளது.
மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரில், புனேயில் இன்று நடைபெற்ற இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற இங்கிலாந்தின் அணித்தலைவர் ஒய்ன் மோர்கன், இந்தியாவை முதலில் துடுப்பெடுத்தாடப் பணித்தார்.
இந்தியா சார்பாக வேகப்பந்துவீச்சாளர் பிரசித் கிருஷ்ணா அறிமுகத்தை மேற்கொண்டதுடன், குருனால் பாண்டியா ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் அறிமுகத்தை மேற்கொண்டிருந்தார்.
முதலில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய இந்தியா, ரோஹித் ஷர்மாவை 28 (42) ஓட்டங்களுக்கு பென் ஸ்டோக்ஸிடம் பறிகொடுத்தது. பின்னர் அணித்தலைவர் விராட் கோலி 56 (60), ஷ்ரேயாஸ் ஐயர் 6 (9), ஷீகர் தவான் 98 (106), ஹர்டிக் பாண்டியா 1 (9) ஓட்டங்களுடன் மார்க் வூட், ஸ்டோக்ஸிடம் வீழ்ந்திருந்தனர்.
எனினும், அடுத்து வந்த லோகேஷ் ராகுலின் ஆட்டமிழக்காத 62 (43), குருனால் பாண்டியாவின் ஆட்டமிழக்காத 58 (31) ஓட்டங்களுடன், 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 317 ஓட்டங்களை இந்தியா பெற்றது.
5 hours ago
8 hours ago
26 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
8 hours ago
26 Jan 2026