Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை
Editorial / 2020 ஜனவரி 02 , பி.ப. 02:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், தமது மைதானத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற மன்செஸ்டர் யுனைட்டெட்டுடனான போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் ஆர்சனல் வென்றது.
ஆர்சனல் சார்பாக, நிக்கொலஸ் பெப்பே, சோக்ரடிஸ் பஸ்தபோலஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
இந்நிலையில், செளதாம்டனின் மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் டனி இங்ஸ் பெற்ற கோல் காரணமாக 0-1 என்ற கோல் கணக்கில் டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் தோற்றது.
இதேவேளை, பிறைட்டன் அன்ட் ஹொவ் அல்பியனின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியை 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் செல்சி முடித்துக் கொண்டிருந்தது. செல்சி சார்பாகப் பெறப்பட்ட கோலை சீஸர் அத்பிலிகெட்டா பெற்றதோடு, பிறைட்டன் அன்ட் ஹொவ் அல்பியன் சார்பாகப் பெறப்பட்ட கோலை அலிரெஸா ஜஹன்பக்காஷ் பெற்றிருந்தார்.
இந்நிலையில், தமது மைதானத்தில் நடைபெற்ற எவெர்ற்றனுடனான போட்டியை 2-1 என்ற கோல் கணக்கில் நடப்புச் சம்பியன்களான மன்செஸ்டர் சிற்றி வென்றது. மன்செஸ்டர் சிற்றி சார்பாகப் பெறப்பட்ட இரண்டு கோல்களையும் கப்ரியல் ஜெஸூஸ் பெற்றிருந்ததோடு, எவெர்ற்றன் சார்பாகப் பெறப்பட்ட கோலை றிஷல்ஸன் பெற்றிருந்தார்.
இதேவேளை, நியூகாசில் யுனைட்டெட்டின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியை 3-0 என்ற கோல் கணக்கில் லெய்செஸ்டர் சிற்றி வென்றிருந்தது. லெய்செஸ்டர் சிற்றி சார்பாக, அயோஸ் பெரேஸ், ஜேம்ஸ் மடின்ஸன், ஹம்ஸா செளத்ரி ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
03 Jul 2025