2025 ஜூலை 21, திங்கட்கிழமை

வீனஸை வென்று சம்பியனானார் வொஸ்னியாக்கி

Editorial   / 2017 ஒக்டோபர் 30 , பி.ப. 09:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெண்கள் டென்னிஸ் சங்க இறுதிப் போட்டிகள் தொடரில், உலகின் தற்போதைய மூன்றாம் நிலை வீராங்கனையான, டென்மார்க்கின் கரோலின் வொஸ்னியாக்கி சம்பியனாகியுள்ளார்.

கரோலின் வொஸ்னியாக்கி, உலகின் ஐந்தாம் நிலை வீராங்கனையான, ஐக்கிய அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸை, 6-4, 6-4 என்ற நேர் செட்களில் வென்றே சம்பியனாகியிருந்தார்.

அரையிறுதிப் போட்டிகளில், கரோலின் வொஸ்னியாக்கி, 7-6 (11-9), 6-3 என்ற நேர் செட்களில், உலகின் தற்போதைய நான்காம் நிலை வீராங்கனையான செக் குடியரசின் செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவாவையும் வீனஸ் வில்லியம்ஸ், 6-7 (3-7), 6-2, 6-3 என்ற செட் கணக்கில், உலகின் எட்டாம் நிலை வீராங்கனையான, பிரான்ஸின் கரோலின் கர்சியாவையும் வென்று இறுதிப் போட்டிகளுக்கு தகுதிபெற்றிருந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .