Shanmugan Murugavel / 2021 மார்ச் 26 , மு.ப. 04:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
மேற்கிந்தியத் தீவுகள், இலங்கை அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட்டானது வெற்றி தோல்வியின்றி முடிவடைந்துள்ளது.
இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், அன்டிகுவாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆரம்பித்த முதலாவது டெஸ்டின் ஐந்தாம் நாளை, தமது இரண்டாவது இனிங்ஸில் ஒரு விக்கெட் இழப்புக்கு 34 ஓட்டங்களை ஆரம்பித்த மேற்கிந்தியத் தீவுகள், குறிப்பிட்ட நேரத்தின் பின்னர் அணித்தலைவர் கிறேய்க் பிறத்வெய்ட்டை லசித் எம்புல்தெனியவிடம் இழந்தது.
எனினும், என்குறுமாஹ் பொன்னரின் ஆட்டமிழக்காத 113, கைல் மேயர்ஸின் 52 ஓட்டங்களுடன், போட்டி முடிவுக்கு வருகையில் தமது இரண்டாவது இனிங்ஸில் 4 விக்கெட்டுகளை இழந்து 236 ஓட்டங்களைப் பெற்றிருந்த மேற்கிந்தியத் தீவுகள், போட்டியை வெற்றி தோல்வியின்றி முடித்துக் கொண்டது.
இதில் எம்புல்தெனியவிடம் மேயர்ஸ் வீழ்ந்ததுடன், விஷ்வ பெர்ணான்டோவிடம் அடுத்து வந்த ஜெர்மைன் பிளக்வூட் வீழ்ந்த போதும், பொன்னருடன் இணைந்து மேலும் விக்கெட்டுகள் வீழ்த்தப்படாததை உறுதிப்படுத்தியிருந்தனர்.
இப்போட்டியின் நாயகனாக பொன்னர் தெரிவானார்.
5 hours ago
8 hours ago
26 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
8 hours ago
26 Jan 2026