A.P.Mathan / 2014 ஜூன் 21 , மு.ப. 09:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலகக் கிண்ண கால்பந்தாட்ட தொடரில் நேற்று இடம்பெற்ற முதல் போட்டியில், கொஸ்டரிக்கா அணி, 1 இற்கு 0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இரண்டாம் சுற்றுக்கு தெரிவாகியுள்ளது. விறு விறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியின் 44ஆவது நிமிடத்தில் பிரையன் ரூயிஸ் அடித்த கோல் மூலமாக கொஸ்டரிக்கா அணி போட்டியில் முன்னிலையைப் பெற்றது. குழு D இல் இருந்து இங்கிலாந்து அணி வெளியேறியுள்ள நிலையில் இத்தாலி, உருகுவே அணிகளில் ஒன்று அடுத்த சுற்றுக்கு தெரிவாகும். இரு அணிகளுக்குமான அடுத்த போட்டியில் வெற்றி பெற்றுக் கொள்ளும் அணி, அடுத்த சுற்றுக்கு தெரிவாகும் அதேவேளை, இத்தாலி அணி ஏற்கெனவே புள்ளி வித்தியாசத்தில் இரண்டாமிடத்தில் இருப்பதனால், அடுத்த போட்டியில் சமநிலை முடிவே அவர்களுக்கு போதுமானது. 5 minute ago
14 minute ago
19 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
14 minute ago
19 minute ago
1 hours ago