2026 ஏப்ரல் 08, புதன்கிழமை

உலகக்கிண்ணத்தில் இருந்து விலகினார் சைட் அஜ்மல்

A.P.Mathan   / 2014 டிசெம்பர் 31 , மு.ப. 01:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகக் கிண்ண தொடருக்கான 30 பேர் கொண்ட குழுவில் இருந்து சைட் அஜ்மல் விலகியுள்ளார். சைட் அஜ்மல், பந்தை வீசி எறிகின்றார் என்ற குற்றச்சாட்டு காரணமாக சர்வதேசப் போட்டிகளில் இருந்து தடை செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து பந்துவீச்சு மாற்றங்களை செய்து, மீண்டும் பந்து வீச தயாராகி, சர்வதேசக் கிரிக்கெட் சபையிடம் மீள் பரிசோதனைக்கு விண்ணப்பிக்க போவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அறிவித்தது. 

இதேவேளை 30 பேர் அடங்கிய பாகிஸ்தானின் உலகக்கிண்ண முன்னோடி குழுவில் சைட் அஜ்மல் சேர்க்கப்பட்டார். அதன் பின்னர் உத்தியோகபற்றற்ற சோதனைகளில் ஈடுபட்ட போது அவருடைய பதுவீச்சு முழுமையாக 15 பாகை கோணத்துக்குள் இல்லை என்ற முடிவு கிடைத்தது. மீள் பரிசோதனையில் இவருடைய பந்துவீச்சு மீண்டும் விதிமுறைகளை தாண்டி இருப்பதாக கண்டறியப்பட்டால் அவர் மீண்டும் ஒன்று தொடக்கம் இரண்டு ஆண்டுகள் வரை பந்துவீச முடியாமல் போகும். அத்துடன் உலகக்கிண்ண இறுதி அணியில் சேர்க்கப்பட்டால் மாற்று வீரரை சேர்க்க முடியாமல் போகும். இவ்வாறான சூழ்நிலைக்கு தள்ளப்பட விரும்பவில்லை என பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தலைவர் அறிவித்துள்ளார். 

சைட் அஜ்மால் 37 வயதை பூர்த்தி செய்துள்ள நிலையில் மீண்டும் இவர் பந்துவீச வந்தால் எத்தனை வருடங்கள் விளையாட முடியும் என்ற கேள்வி நிலை உள்ளது. உலகக்கிண்ண தொடருக்கு பின்னர் இவருக்கு ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் வாய்ப்பு கிடைப்பதும் அரிது. பாகிஸ்தான் கிரிக்கெட் சபை இவரின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டே இந்த முடிவை எடுத்ததாகவும், சைட் அஜ்மல் தானாகவே இந்த குழுவில் இருந்து விலகியதாகவும் கூறியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .