A.P.Mathan / 2015 ஜனவரி 26 , மு.ப. 03:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
சூதாட்டத்தில் ஈடுபட்டமைக்காக தடைசெய்யப்பட்ட பாகிஸ்தான் அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஆமிர், அடுத்த மாதம் முதல் மீண்டும் கிரிக்கெட் போட்டிகளில் ஈடுபட முடியும் என பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இருப்பினும் அவர் உடனடியாக அணித் தெரிவுக்கு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டார் என பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் பெயர் குறிப்பிடாத அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மொஹமட் ஆமிரின் 5 வருட தடை இந்த வருடம் செப்டெம்பர் மாதம் முதல் முடிவுக்கு வரவுள்ளது. இந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை, சர்வதேசக் கிரிக்கெட் சபையிடம் மீண்டும் கிரிக்கெட் போட்டிகளில் பங்குபற்ற தளர்வுகளை ஏற்படுத்தி தருமாறு கேட்டுக் கொண்டது. இதன்படி சர்வதேசக் கிரிக்கெட் சபை அதிகாரிகள் ஆமிரை நேர்முகப் பரீட்சைக்கு அழைத்து இருந்தனர். இதன் பின்னர் பாகிஸ்தான் ஊடகங்கள், ஆமிர் அடுத்த மாதம் முதல் கிரிக்கெட் போட்டிகளில் பங்குபற்றுவார் என செய்தி வெளியிட்டு இருந்தன. இந்த நிலையிலேயே பெயர் குறிப்பிடாத அந்த அதிகாரி "பாகிஸ்தான் கிரிக்கெட் சபைக்கான செயற்றிட்டம் உள்ளது. அதன்படி மீண்டும் அவர் விளையாட அணிக்குள் தெரிவு செய்யப்படுவாரா என்ற முடிவு எடுக்கப்படவேண்டிய நிலை உள்ளது” எனக் கூறியுள்ளார்.
இனி வரும் 5 தொடக்கம் 6 மாத காலப்பகுதியில் அவர் தன்னை நல்லவராக, மீண்டும் இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடமாட்டார் என நிரூபிக்கவேண்டும். அதன் பின்னர் அவரின் போர்ம், பந்துவீச்சு திறைமை போன்றனவற்றை மீண்டும் நிரூபிக்க வேண்டும். அதன் பின்னரே அணித் தெரிவில் அவர் மீது கவனம் செலுத்தப்படும் என மேலும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago