A.P.Mathan / 2015 மார்ச் 31 , மு.ப. 08:45 - 0 - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தான் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கான அணியின் தலைவராக ஆஷர் அலி நியமிக்கப்பட்டுள்ளார். தற்போதைய பாகிஸ்தான் அணியில் இடம் பிடிக்காதா ஆஷர் அலி, இரண்டு வருடங்களின் பின்னர் அணித்தலைவராக பாகிஸ்தான் அணியில் இடம் பிடித்துள்ளார்.
மிஸ்பா உல் ஹக், ஓய்வு பெற்றதை தொடர்ந்து அவரின் இடத்துக்கு அணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டு தலைவராக நியமிக்கப்பட்டுளார். இந்த முடிவை பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் தலைவர் சகரியார் கான் எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
30 வயதான ஆஷர் அலி, 14 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் மாத்திரமே விளையாடியுள்ளார். உள்ளூர்ப் போட்டிகளில் தலைவராக கடமையாற்றிய அனுபவம், கிரிக்கெட் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் சபையுடன் உள்ள நல்ல உறவு என்பன இவர் அணித்தலைமை பொறுப்பை பெற வாய்ப்புக்களை வழங்கியுள்ளது. மிஸ்பா உல் ஹக், வொக்கார் யூனிஸ் ஆகியோரும் இவரை பரிந்துரை செய்துள்ளனர்.
பாகிஸ்தான் அணியின் அண்மைக்கால அதிரடி துடுப்பாட்ட வீரராக மாறியுள்ள விக்கெட் காப்பாளர் சப்ராஸ் அஹமட் உப தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கே 20-20 போட்டிகளின் உப தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது. டெஸ்ட் போட்டிகளின் தலைவராக மிஸ்பா உல் ஹக் தொடரும் அதேவேளை உபதலைவராக ஆஷர் அலி நியமிக்கப்பட்டுள்ளார். 20-20 போட்டிகளின் தலைவராக சஹிட் அப்ரிடி தொடர்கின்றார்.
கடந்த இரண்டு வருட காலமாக ஆஷர் அலி அணியில் இடம் பிடிக்கவில்லை என்பது எனக்கு தெரியும். ஆனால் அவர் அண்மைய உள்ளூர்ப் போட்டிகளில் காட்டிய திறைமை அவர் அணியில் இடம் பிடிக்க போதுமானது என பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் தலைவர் கூறியுள்ளார்.
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago