Kogilavani / 2011 ஏப்ரல் 05 , பி.ப. 01:00 - 0 - {{hitsCtrl.values.hits}}

(லத்தீப்)
மட்டக்களப்பு செட்டிப்பாளையம் பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து நல்ல பாம்பு இனத்தைச் சேர்ந்த பாம்புக் குட்டிகள் 65 அவ்வீட்டின் உரிமையாளர் பிடித்து வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் கையளித்துள்ளார்.
குறித்த குடியிருப்பிலிருந்து மூன்று தினங்களுக்கு முன்னர் நல்ல பாம்பு இன பாம்பொன்று நடமாடுவதனை கண்டதாகவும், இன்று காலை குடிமனையில் குட்டி பாம்பு ஒன்று வெளியேறுவதனை கண்டதாகவும் வீட்டுரிமையாளர் கூறினார்.
உடமைகளை பிரட்டிப்பார்த்தப்போது 65 பாம்பு குட்டிகளும், முட்டைக் கோதுகளும் கண்டெடுக்கப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.
இப் பாம்புக்குட்டிகளை மட்டக்களப்பு வவுணதீவு காட்டுப்பகுதியில் இன்று மாலை விடுவித்ததாக வன ஜீவராசி அதிகாரிகள் தெரிவித்தனர்.
.jpg)

.jpg)
1 hours ago
9 hours ago
14 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
9 hours ago
14 Jan 2026