Suganthini Ratnam / 2016 டிசெம்பர் 07 , மு.ப. 09:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வடிவேல் சக்திவேல்
கிழக்கு மாகாணத்தை வதிவிடமாகக் கொண்ட, ஏனைய மாகாணங்களில் சேவையாற்றும் தமிழ் பேசும் ஆசிரியர்களுக்கான ஒன்றுகூடல், சனிக்கிழமை முற்பகல் 10 மணிக்கு மட்டக்களப்பிலுள்ள ஸ்ராண்டட் கல்வி நிலையத்தில் நடைபெறவுள்ளதாக இதன் ஒழுங்கமைப்புக்குழு இணைப்பாளர் எஸ்.கோபிநாத் தெரிவித்தார்.
இதில் பட்டதாரி ஆசிரியர்கள், தேசிய கல்வியியற் கல்லூரி ஆசிரியர்கள், ஆசிரியர் கலாசாலை பயிற்சி ஆசிரியர்கள், உதவி ஆசிரியர்கள், தேசிய உயர் கல்வி டிப்ளோமா ஆசிரியர்கள் கலந்துகொள்ள முடியும்.
இதன்போது, வெளிமாகாண ஆசிரியர்கள் சங்கம் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்படவுள்ளது. வெளிமாகாணங்களில் சேவையாற்றும் ஆசிரியர்களை பதிவு செய்வதற்கான விண்ணப்பப்படிவங்களும் வழங்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.
9 hours ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
21 Dec 2025