Janu / 2026 ஜனவரி 28 , பி.ப. 02:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு , மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட களுவாஞ்சிக்குடி முச்சக்கர வண்டிகள் சாரதிகளுக்கும் , போரதீவுபற்று பிரதேச சபைக்குட்பட்ட முச்சக்கர வண்டிகள் சாரதிகளுக்கும் இடையில் தொடர்ச்சியாக முறுகல் ஏற்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
களுவாஞ்சிக்குடி முச்சக்கர வண்டி சாரதிகள் களுவாஞ்சிக்குடி பொதுச் சந்தைக்கு அருகில் தமது முச்சக்கர வண்டிகளை நிறுத்த அனுமதியளிப்பதில்லை எனவும், இதனால் தமது வாழ்வாதாரம் தொடர்ச்சியாக பாதிக்கப்படுவதாக போரதீவுபற்று முச்சக்கர வண்டி சாரதிகள் குற்றம் சுமத்துகின்றனர்.
இதனிடையில் புதன்கிழமை ( 28 ) காலை களுவாஞ்சிக்குடி முச்சக்கர வண்டி சாரதிகள் சங்க செயலாளருக்கும் , போரதீவுபற்று முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கத்தினருக்கும் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.
களுவாஞ்சிக்குடி முச்சக்கர வண்டி சாரதிகள் சங்க செயலாளர் , தம்மை ஒரு போதும் முச்சக்கர வண்டிகளை நிறுத்த அனுமதி தர முடியாது என கூறியதாக போரதீவுபற்று பிரதேச முச்சக்கர வண்டி சாரதிகள் தெரிவிக்கின்றனர்.

7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago