Gavitha / 2015 ஒக்டோபர் 24 , மு.ப. 07:24 - 0 - {{hitsCtrl.values.hits}}

வடிவேல்-சக்திவேல், யோ.சேயோன்
மட்டக்களப்பு மாவட்டம், களுவாஞ்சிகுடி பிரதேசத்துக்குட்பட்ட குருக்கள்மடம் ஸ்ரீ கிருஷ்ணன் ஆலயத்துக்குள் வெள்ளிக்கிழமை இரவு (23) புகுந்த இனந்தெரியாத நபர்கள், ஆலய விக்கிரகங்கள், மற்றும் சிலைகளை உடைத்துவிட்டுச் சென்றுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.
ஆலயத்தின் நவக்கிரகத்தில் வைக்கப்படப்டிருந்த விக்கிரகங்கள், மற்றும் சிலைகள் அடங்கலான 13 சிலைகள் உடைக்கப்பட்டுள்ளன.
வழக்கம்போல் அதிகாலை 4.30 மணிக்கு ஆலயத்துக்குச் சென்ற ஆலய பரிபாலனைச்சபைச் செயலாளர், ஆலய விக்கிரகங்கள், உடைக்கப்பட்டு கீழே கிடப்பதை கண்டுள்ளார். இதன்பின்னரே ஆலயம் உடைக்கப்பட்டுள்மை தெரிவந்ததாக குருக்கள்மடம் ஸ்ரீ கிருஷ்ணன் ஆலய நிருவாகத்தினர் தெரிவிக்கின்றனர்.
இச்சம்பவம் பற்றி அறிந்த மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைகப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் அனைவரும் சம்பவ இடத்துக்கு சனிக்கிழமை (24) காலை விஜயம் செய்து நிலமையை நேரில் கண்டு விசாரித்தனர்.
இது தொடர்பான விசாரணைகளை களுவாஞ்சிக்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.





21 Dec 2025
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 Dec 2025
21 Dec 2025