2025 மே 23, வெள்ளிக்கிழமை

உத்தரவுகளையும் மீறி 15ஆவது நாளாகவும் கட்டடம் முற்றுகை

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2017 ஓகஸ்ட் 22 , மு.ப. 11:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கிழக்குப் பல்கலைக்கழக நிர்வாக மற்றும் பேரவைக் கட்டடடத்தை ஆக்கிரமித்து தொடர்ச்சியாகப் போராட்டங்களை நடத்தி வரும் மாணவர்களை அங்கிருந்த வெளியேறுமாறு கோரி, நீதிமன்றம் மற்றும் பல்கலைக்கழகக் கவுன்ஸில் ஆகியவை விடுத்த உத்தரவுகளையும் மீறி, அப்பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டம், வந்தாறுமூலை வளாகத்தில் 15ஆவது நாளாக இன்று செவ்வாய்க்கிழமையும் தொடர்ந்தும் இடம்பெற்றது.

முறையற்ற வகுப்புத்தடைகளை நீக்குமாறும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ள 2ஆம் வருட மாணவர்களுக்கான விடுதி வசதிகளைப் பெற்றுத் தருமாறும், பல்கலைக்கழக  நிர்வாகத்தைக் கண்டித்தும், மாணவர்கள் தமது பிரதான தேவைகள் மற்றும் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடாமல்  தாம், பேரவை Senate கட்டடத்தினுள் தங்கியிருந்து வருவதாக மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, இரவு பகலாகத் தொடர்ச்சியான போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்களின் மன அழுத்தத்தைக் குறைப்பதற்காகவும் பொழுதுபோக்குக்காகவும் போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்களில் ஒரு சாரார் கலை நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து, மாணவர்களுக்கு களிப்பூட்டி, கௌரவித்து, பரிசளித்து, பாராட்டி  வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X